Demo Blog

அன்பிற்கு மகத்துவம் அதிகம் -

by Unknown on Nov.22, 2009, under ,

ஓரல் ராபர்ட்ஸ் என்ற போதகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை பற்றி பிரசங்கம் செய்வார் . ஒவ்வொரு நாளும் தன்னை நாடி வந்த மக்களுக்காக மனதுருகி ஜெபிப்பார்.ஒரு நாள் கூட்டம் அதிகமாக இருந்ததால் .,

எல்லோருக்காகவும் ஜெபம் செய்து முடித்ததும் களைப்பு அதிகமானது. காரில் ஏற சென்ற அவரை ஒரு பெண் வழிமறித்து.,

" ஐயா எனக்கு தீராத வியாதி இருக்கிறது ., நீங்கள் தொட்டாலே எனது வியாதி குணமாகிவிடும் ., எனக்காக ஒருசில நிமிடங்கள் ஜெபியுங்கள் " என்று மன்றாடினார் !

காரில் எறசென்றவரை தடுத்த அந்த மூதாட்டியின் மீது கோபம் கொண்ட ராபர்ட்ஸ் ., எனக்கு நேரமாகிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மூதாட்டியை இடித்து தள்ளிவிட்டு காரில் ஏறி சென்றார்.

அடுத்த நாள் கூட்டம் கூடியதும் அந்த மூதாட்டி முதல் ஆளாக மேடையில் ஏறி பேசத்த் துவங்கினார்.!

"அன்புள்ள மக்களே! நேற்று நான் இந்த போதகரை சந்தித்து என்னை தொட்டு என் வியாதியை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன்... அவர் என்னை தொட்டுத் தள்ளி விட்டார். எப்படியோ எனக்கு சரியாகிவிட்டது. இது அவர் கை என்மேல் பட்டதால் தான்  நடந்திருக்கிறது என்று நம்புகிறேன்.,!"  என்றார்.

போதகருக்கு கண்ணீர் பெருகியது.,ஆண்டவரே அவரின் முன் வந்து பேசுவதை போல் இருந்தது
"நான் உனக்கு கொடுத்த வரத்தினால் ., நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த பெண்ணுக்கு  நோய் குணமாகி அற்புதம் நிகழ்ந்துவிட்டது..!நீ அன்போடு நடந்து கொள்ளாததால் உனக்கு இந்த அர்ப்புதத்தில் பங்கோ பலனோ இல்லை." என்று அவருக்குள் ஒரு குரல் ஒலித்தது அதை இயேசு கிறிஸ்த்துவின் குரலாகவே கருதினார்.

என் உள்ளுணர்வு :
அன்பில்லாத சேவையால் எந்தப் பலனுமில்லை! தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்! சாதியால்.,பிறப்பால் ,நிறத்தால் ,பணத்தால், வேறுபட்டாலும்  அன்பை எல்லோருக்கும் சமநீதியாய் வழங்க வேண்டும் ! எல்லா செயல்களிலும் அன்பினை குழைத்துச் செய்ய வேண்டும்!
1 comments more...

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார்

by Unknown on Nov.22, 2009, under

மந்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் புரியாத தேவகி தன்வயிற்றில்
அத்த்ததின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே !
முகிழ் நகையீர் ! வந்து காணீரே!

பொருள் : 
மதம் கொண்ட யானைகளை சொந்தமாக வைத்திருக்கும் வாசுதேவரின் மனதில் எங்கெங்கும் நிறைந்திருப்பவள் தேவகி! அவளின் வயிற்றில் அஸ்த நட்சத்திரத்திற்கு பத்தாம் நாளான ரோகினி நாளில் கண்ணன் பிறந்தான் ..!! கண்ணனை முத்தமிடும்  கோகுல பெண்களே...!! காணீர்.!! என் அப்பன் கண்ணனின் அழகினை காணீர்..!!
0 comments more...

நிஜமான வெற்றி - தாயுமானவர்

by Unknown on Nov.22, 2009, under ,

"நான் தவறே செய்யாதவன்" என்று 
யார் ஒருவனும் கூறிக்கொள்ள முடியாது ..!

தவறு திருத்தத்திற்கு  உரியது.,

திருத்தப்படும் போது 
பிழைகள் அனைத்து சரியாகி விடும்! 

தவறு செய்து விட்டதாக 
பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் 
தோல்வி என்பதே கிடையாது..!
அவமானமும் கிடையாது! 

அதுதான் நிஜமான வெற்றி 
என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!


0 comments more...

பகவத் கீதை

by Unknown on Nov.22, 2009, under

யோக: கர்மஸூ கௌசலம் !
        योग: कर्मसु कौसलम
--------------------------------------------------------------------------------
பொருள் : செய்வதை செம்மையாக செய்வதே யோகம்
--------------------------------------------------------------------------------
விளக்கம் : செயல்களில் இது சிறிது இது பெரிது என்ற எண்ணம் மனித சிந்தையை விட்டு அகன்று, "செய்கிற செயல்கள் யாவும் சிறப்பே" என்று என்னும் நிலை வரின்., கருணா மூர்த்தியே அதுவே நான் உன்னை உணர்ந்து  உன்னிடம் வந்து சேர்கிற நொடி ஆகும்!

                                              பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்  அர்ஜூனர்  சொன்னது 
1 comments more...
Prabhakaran Palanisamy. Powered by Blogger.

Looking for something?

Use the form below to search the site:

Still not finding what you're looking for? Drop a comment on a post or contact us so we can take care of it!