Demo Blog

அன்பிற்கு மகத்துவம் அதிகம் -

by Unknown on Nov.22, 2009, under ,

ஓரல் ராபர்ட்ஸ் என்ற போதகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை பற்றி பிரசங்கம் செய்வார் . ஒவ்வொரு நாளும் தன்னை நாடி வந்த மக்களுக்காக மனதுருகி ஜெபிப்பார்.ஒரு நாள் கூட்டம் அதிகமாக இருந்ததால் .,

எல்லோருக்காகவும் ஜெபம் செய்து முடித்ததும் களைப்பு அதிகமானது. காரில் ஏற சென்ற அவரை ஒரு பெண் வழிமறித்து.,

" ஐயா எனக்கு தீராத வியாதி இருக்கிறது ., நீங்கள் தொட்டாலே எனது வியாதி குணமாகிவிடும் ., எனக்காக ஒருசில நிமிடங்கள் ஜெபியுங்கள் " என்று மன்றாடினார் !

காரில் எறசென்றவரை தடுத்த அந்த மூதாட்டியின் மீது கோபம் கொண்ட ராபர்ட்ஸ் ., எனக்கு நேரமாகிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மூதாட்டியை இடித்து தள்ளிவிட்டு காரில் ஏறி சென்றார்.

அடுத்த நாள் கூட்டம் கூடியதும் அந்த மூதாட்டி முதல் ஆளாக மேடையில் ஏறி பேசத்த் துவங்கினார்.!

"அன்புள்ள மக்களே! நேற்று நான் இந்த போதகரை சந்தித்து என்னை தொட்டு என் வியாதியை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன்... அவர் என்னை தொட்டுத் தள்ளி விட்டார். எப்படியோ எனக்கு சரியாகிவிட்டது. இது அவர் கை என்மேல் பட்டதால் தான்  நடந்திருக்கிறது என்று நம்புகிறேன்.,!"  என்றார்.

போதகருக்கு கண்ணீர் பெருகியது.,ஆண்டவரே அவரின் முன் வந்து பேசுவதை போல் இருந்தது
"நான் உனக்கு கொடுத்த வரத்தினால் ., நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த பெண்ணுக்கு  நோய் குணமாகி அற்புதம் நிகழ்ந்துவிட்டது..!நீ அன்போடு நடந்து கொள்ளாததால் உனக்கு இந்த அர்ப்புதத்தில் பங்கோ பலனோ இல்லை." என்று அவருக்குள் ஒரு குரல் ஒலித்தது அதை இயேசு கிறிஸ்த்துவின் குரலாகவே கருதினார்.

என் உள்ளுணர்வு :
அன்பில்லாத சேவையால் எந்தப் பலனுமில்லை! தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்! சாதியால்.,பிறப்பால் ,நிறத்தால் ,பணத்தால், வேறுபட்டாலும்  அன்பை எல்லோருக்கும் சமநீதியாய் வழங்க வேண்டும் ! எல்லா செயல்களிலும் அன்பினை குழைத்துச் செய்ய வேண்டும்!
1 comments more...

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார்

by Unknown on Nov.22, 2009, under

மந்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் புரியாத தேவகி தன்வயிற்றில்
அத்த்ததின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே !
முகிழ் நகையீர் ! வந்து காணீரே!

பொருள் : 
மதம் கொண்ட யானைகளை சொந்தமாக வைத்திருக்கும் வாசுதேவரின் மனதில் எங்கெங்கும் நிறைந்திருப்பவள் தேவகி! அவளின் வயிற்றில் அஸ்த நட்சத்திரத்திற்கு பத்தாம் நாளான ரோகினி நாளில் கண்ணன் பிறந்தான் ..!! கண்ணனை முத்தமிடும்  கோகுல பெண்களே...!! காணீர்.!! என் அப்பன் கண்ணனின் அழகினை காணீர்..!!
0 comments more...

நிஜமான வெற்றி - தாயுமானவர்

by Unknown on Nov.22, 2009, under ,

"நான் தவறே செய்யாதவன்" என்று 
யார் ஒருவனும் கூறிக்கொள்ள முடியாது ..!

தவறு திருத்தத்திற்கு  உரியது.,

திருத்தப்படும் போது 
பிழைகள் அனைத்து சரியாகி விடும்! 

தவறு செய்து விட்டதாக 
பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் 
தோல்வி என்பதே கிடையாது..!
அவமானமும் கிடையாது! 

அதுதான் நிஜமான வெற்றி 
என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!


0 comments more...

பகவத் கீதை

by Unknown on Nov.22, 2009, under

யோக: கர்மஸூ கௌசலம் !
        योग: कर्मसु कौसलम
--------------------------------------------------------------------------------
பொருள் : செய்வதை செம்மையாக செய்வதே யோகம்
--------------------------------------------------------------------------------
விளக்கம் : செயல்களில் இது சிறிது இது பெரிது என்ற எண்ணம் மனித சிந்தையை விட்டு அகன்று, "செய்கிற செயல்கள் யாவும் சிறப்பே" என்று என்னும் நிலை வரின்., கருணா மூர்த்தியே அதுவே நான் உன்னை உணர்ந்து  உன்னிடம் வந்து சேர்கிற நொடி ஆகும்!

                                              பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்  அர்ஜூனர்  சொன்னது 
1 comments more...

உடலுக்காய் வாழும் உயிர்கள் - பட்டினத்தார்

by Unknown on Nov.22, 2009, under

அநித்தியத்தை நித்தியமென்று
ஆதரவாய் எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே
தனைமரக்கேன் என்குதே
- பட்டினத்தார்

பொருள் :

உயிரை  விட பெரிய விடயமாய் உடலை பேணுகிறான் மனிதன் !
பெண்ணிடம் ஆணும் ஆணிடம் பெண்ணும் என்றைக்கு உடற் பற்றற்று 
உயிரில் உறைந்திருக்கும் அன்பிற்காய் மட்டும் வாழ்கிறார்களோ
அன்று கண்டிப்பாய் உலகில் பாவங்கள் குறைந்திருக்கும் ! 
 
2 comments more...

உன் வலியை தீர்ப்பவன் இவனே- மாணிக்கவாசகர்

by Unknown on Nov.22, 2009, under ,

தாமே தமக்குச் சுற்றமும் தாமே
தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் !
                                 -மாணிக்கவாசகர்

பொருள் :
உன் வலிகளை முற்றிலும் உணர்ந்து அதற்கு நிவாரணம் தருகிறவனும், உன் விதியை அறிந்து உனக்காகவே உன் கூடவே இறுதி வரை வரக்கூடியவனும் , உன் சுற்றமும், நட்புமாய் , உனக்கே உரியவன் ஒருவன் உலகில் இருக்கிறான்! அவன் தான் " நீ "!
0 comments more...

மனிதனும் தெய்வம் தான் - தாயுமானவர்

by Unknown on Nov.22, 2009, under ,

எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சிந்துருவே இன்பச் சிவமே பராபரமே
                                                                         - தாயுமானவர்
பொருள் :
"உயிர்கள் அனைத்தும் அரியும் சிவனுமே!" இறைவனின் படைப்பினாலான அத்துனை மனிதனையும் இறைவனின் வடிவமே என்று உணரத் தொடங்கியவனுக்கு வாழ்வொன்றும் கடினமில்லை!
0 comments more...

எது அர்த்தமுள்ள ஆன்மிகம்? - பத்திரகிரியார்

by Unknown on Nov.22, 2009, under ,

ஆதிமுதலாகி நின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதியறிந்து உள்ளே உணர்வதினி எக்காலம் ?
                                                                           - பத்திரகிரியார்
பெருமாளையும் , சிவனையும் உருகி வணங்குவதோடு முடிந்து விடுவதில்லை ஆன்மிகம்! மண்ணில் வாழும் மாந்தர்கள் யாவரும் கடவுளின் வடிவம் என்று அன்பு செய்யத் தொடங்கும் போது நம்மில் ஆன்மிகம் முழு உயிர் பெறுகிறது  !
0 comments more...

உறுதியான வெற்றி

by Unknown on Nov.22, 2009, under

    

               பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
              இருள்தீர எண்ணிச் செயல்
                                                                                                   -திருக்குறள்

 பொருள் :
"ஒவ்வொரு பெரிய வெற்றியின் தொடக்கமும் கண்டிப்பாக ஒரு சிறிய முயற்சியின் விளைவு  தான்!" என்னும் உண்மையை உணர்ந்தவனா நீ ? வருந்தாமல் முன்னேறு !  கண்டிப்பாக உன் வெற்றியும் நிச்சயிக்க பட்ட ஒன்றாகி  விட்டது !

0 comments more...

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

by Unknown on Nov.22, 2009, under

"என் கைகள்தாம் என் முதல் மேல்துணியாகும். எத்தனை கம்பளி போர்த்துக்கொன்டாலும் அதற்கு ஈடாகுமா!"
                                      - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

உணர்வதர்க்கோர் உள்ளுணர்வு :

பட்டு சட்டை பணக்காரனின் அடையாளம் !
"பத்து விரல் போதும்" (என் மானத்தை மறைக்க) என்று சொன்ன மகரிஷி மனிதனுக்கு அடையாளம் !
எல்லாம் இருப்பவன் செயற்கையாய் மகிழ்கிறான் 
ஒன்றும் இல்லாதவன் என்றென்றும் மகிழ்கிறான் !
"இல்லாமையில் தான் இருக்கிறது இனிமையான வாழ்க்கை "
என்பதற்கு ரமணர் ஓர் அற்புத எடுத்துக்காட்டு !
0 comments more...

நீயன்றி வேறு கதியில்லை

by Unknown on Nov.22, 2009, under

நிறையுடைய நெஞ்சின் இடையை போற்றி
நீங்காதுஎன் னுள்ளத் திருந்தாய் போற்றி .
                                                         -அப்பர்
பொருள் :
குறைகுடமாய் இருக்கிற என்னெஞ்சை எப்போழ்து நான் உன் நினைவிர்ற்கென அர்ப்பணித்தேனோ அப்போழ்தே நிறைந்துவிட்டேன் தேவே !
இனி உன்னையன்றி வேறேதும் தேவையில்லையே!
0 comments more...

உன்னை நீயே திருத்திக்கொள்

by Unknown on Nov.22, 2009, under

ஆங்காரம்  உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்
                                                                   -பத்திரகிரியார்
பொருள் :
கடவுள் இல்லை ! இருந்திருந்தால் என்னை இப்படி என்னை துன்பப்படுத்தி வேடிக்கை பார்ப்பானோ ? என்று வீண் பேச்சு பேசிக்கொண்டிருக்கும் நான் ! ஒரு போதும் உன்னை குறைசொல்வதை விடுத்து என்னை திருத்திக்கொள்ள முயன்றது கூட இல்லை !இனி 
என்னை நானே திருத்தி கொள்ளும் பக்குவத்தை எனக்குத் தந்தருள் பராபரமே !
0 comments more...

உனக்காக பித்தனானேன்

by Unknown on Nov.22, 2009, under

ஏத்தார் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே
பித்தனானேன் மெத்தவுனான் பேதை பராபரமே .
                                                                        -தாயுமானவர்
பொருள் :
கலியுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின்மேல் பித்துப் பிடித்தவராக
இருக்கையில் இறைவா - நான் உன் அருளுக்காய் 
பித்தன் ஆகிட வேண்டுகிறேன் !
0 comments more...

தண்ணீர் நீ - நீர்க்குமிழி நான்

by Unknown on Nov.22, 2009, under

நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடர்
கித்தனைதான் துன்பமுண்டோ அண்ணே பராபரமே.
                                                                            - தாயுமானவர் 
பொருள் :
என் தலைவிதி எழுதிய எம்பெருமானே !
நீ தண்ணீர் !
நான் அதில் வெறும் நீர்க்குமிழி !
நிலையில்லாத இந்த நீர்க்குமிழிக்கும் 
நீ இத்தனை துன்பத்தை ஏன் கொடுத்தாய்?
0 comments more...

வாழும் போதே சாகத்துணி

by Unknown on Nov.22, 2009, under

ஆவியொடு காய மழிந்தாலும் மேதியினில்
பாவிஎன்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தார முங்கடம்பும் வெண்டாம் - மடநெஞ்சே
செத்தாரை போலத் திரி .
                                                            -பட்டினத்தார்


பொருள் :
 வாழும்போதே சாகிறவர்கள் யாரோ ( இலட்சியத்திற்காக , முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் )அவரே செத்த பிறகும் வாழ்கிறவர்கள் ஆவர்  !
0 comments more...

அட்சய பாத்திரம்

by Unknown on Nov.22, 2009, under

எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்
அத்தனைபேர் உண்டாலும் அனுவுங் குறையாண்டி !
                                                                           - பட்டினத்தார்

எம்பெருமானே ! நீவிர் அல்ல அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்!
உன்னை சொந்தமாக்கி கொள்ள எவர் தான் விரும்ப மாட்டார் ??
0 comments more...

தொடக்கமும் நீ முடிவும் நீ

by Unknown on Nov.22, 2009, under

குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனை
பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம் ?
                                                    -பத்திரகிரியார்

பொருள் : 
மெய்செய்து விதிசெய்து உலக வாழ்வை எனக்கு படியளந்த பராபரமே !
நீயளித்த வாழ்வை நீங்கி உன்னில் நான் வந்து கலப்பது எப்போதெனத் தெரியலையே .!!
0 comments more...

மாயைகள் எனும் ஆசைகள்

by Unknown on Nov.22, 2009, under

இகமுழுதும் பொய்யெனவே
எயத்துனர்ந்தால் , ஆங்கே
மிகவளர் வந்தஅருள்
மெய்யே - அகநெகிழப்
பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தை
சேரீர் ; அதுவே திறம் .
                                           - தாயுமானவர்

பொருள் :
மாயைகள் எனும் ஆசைகள் நிறைந்த உலக வாழ்க்கை ஒரு பொய் மான் போன்றதாகும் !
அவ்வாசைகள் கடந்து உன்னை வந்து சேர  அருள் புரிவாயாக இறைவா!! 
0 comments more...

எல்லாம் அவன் செயல்

by Unknown on Nov.22, 2009, under ,

பார்க்கின் அண்டபிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே
யார்குஞ் செயலிலையே ஐயா பராபரமே.
                                                                         - தாயுமானவர்

 பொருள் :  
உலகின் ஒவ்வொரு நிகழ்வும் இறைவா உன் செயல் !
என் செயல் என்பது அன்பு செய்வது மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை! 
எல்லாம் அவன் செயல்
0 comments more...

மனிதனே கடவுள் - தாயுமானவர்

by Unknown on Nov.22, 2009, under ,

உண்டு உடுத்துப் பூண்டு இங்கு உலகத்தார் போல்திரியும்
தொண்டர்வினை யாட்டே சுகங்காண் பராபரமே !
                                                                                        - தாயுமானவர்
பொருள் :
கண்முன் தெரிகிரவனை கடவுளென எண்ணி சேவை செய்யும்
மனதை வளர்த்துக்கொள்! அப்போதே  நீயும் முழு மனிதனாய் ஆகிவிடுகிறாய்!
0 comments more...

அன்பே சிவம்

by Unknown on Nov.22, 2009, under ,

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆறும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆறும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
                                                                     - திருமந்திரம்
பொருள் : 
ஈசனும் இனிய பண்பாகிய அன்பும் ஒன்றென உணர் மனிதன நெஞ்சமே !
அன்பே கடவுள் ! அன்பே கேள்வி ! அன்பே பதில் ! அன்பே சிவம் !
0 comments more...
Prabhakaran Palanisamy. Powered by Blogger.

Looking for something?

Use the form below to search the site:

Still not finding what you're looking for? Drop a comment on a post or contact us so we can take care of it!